மாவட்ட ஆட்சியர்களுடன் டாண்டன் இன்று ஆலோசனை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட ஆட்சியர்கள்) மத்திய தேர்தல் ஆணையர் டாண்டன் இன்றுஆலோசனை நடத்துகிறார்.

நாடாளுமன்றத் தேர்தல் ஏற்பாடுகள் தொடர்பாக நேற்று சென்னையில் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதிகளுடன்ஆலோசனைக் கூட்டத்துக்கு தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்திருந்தது. அப்போது தமிழகம் முழுமைக்கும் ஒரேநாளில் தேர்தலை நடத்தி முடிக்குமாறு அனைத்துக் கட்சியினரும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுத்தனர்.

இந் நிலையில், 30 மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் டாண்டன் இன்று ஆலோசனை நடத்தினார். இன்றையஆலோசனைக் கூட்டத்தில் மாநில தலைமை தேர்தல் அதிகாரி மிருத்யுஞ்சய் சாரங்கியும் கலந்து கொண்டார்.அப்போது தமிழகத்தில் தேர்தலை நேர்மையாக நடத்த சட்டத்திற்குட்பட்ட அனைத்து நடவடிக்கைகள் குறித்தும்,தேர்தலின்போது அரசியல் கட்சிகள் பின்பற்றப்பட வேண்டிய நடத்தை விதிமுறைகள் குறித்தும் முக்கியமாகவிவாதிக்கப்பட்டது.

தேர்தல் விதிமுறைகளை மீறும் கட்சிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்கும்படியும், தேர்தல்செலவீனங்களை வீடியோ ஆதாரத்துடன் தாக்கல் செய்யுமாறும் டாண்டன் கேட்டுக் கொண்டதாகத் தெரிகிறது.

இதற்கிடையே மத்திய தேர்தல் ஆணையத்தின் துணைத் தேர்தல் அதிகாரி ஏ.என்.ஷா நிருபர்களுக்குப்பேட்டியளிக்கும்போது, கல்வி நிறுவனங்களின் தேர்வு தேதிகளைப் பொறுத்தே, நாடாளுமன்ற தேர்தல் தேதிகளைமுடிவு செய்ய இயலும்.

கடைசியாக ஏப்ரல் 16ம் தேதி தமிழ்நாட்டிலும், ஏப்ரல் 17ம் தேதி ஒரிசாவிலும் தேர்வுகள் முடிவடைகின்றன.அதனையடுத்து தேர்தலை எப்போது நடத்துவது என்பதை தேர்தல் ஆணையம் விரைவில் அறிவிக்கும் என்றார்.

திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல் வெளியீடு

கடந்த டிசம்பர் மாதம் புதிய வாக்காளர் சேர்ப்பு, திருத்தம் தொடர்பான விண்ணப்பங்கள் பெறப்பட்டன. அதன்படி திருத்தபட்டவாக்காளர் பட்டியல் இன்று மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்கள் முன்பு பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+