வீரப்பன் தலைக்கு ரூ.5 கோடி பரிசு: கிருஷ்ணா
பெங்களூர்:
சந்தனக் கடத்தல் வீரப்பன் இருக்குமிடம் பற்றி துப்பு கொடுத்தாலோ அல்லது அவனை பிடித்துக் கொடுத்தால் ரூ.5கோடி பரிசளிக்கப்படும் என்று கர்நாடக முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணா கூறியுள்ளார்.
வீரப்பன் விவகாரத்தை மாநில பா.ஜ.கவினர் கையில் எடுத்து காங்கிரசுக்கு எதிராக பிரச்சாரம் செய்துவருவதையடுத்து இந்த அதிரடி அறிவிப்பை கிருஷ்ணா வெளியிட்டுள்ளார்.
பெங்களூரில் இது தொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
வீரப்பனைப் பிடிக்க கர்நாடக மற்றும் தமிழக அதிரடிப்படை போலீஸார் தீவிர தேடுதல் வேட்டை நடத்திவருகிறார்கள். மக்களவைத் தேர்தலுக்கு முன்போ அல்லது பின்போ வீரப்பன் பிடிபடக்கூடும். அவனைப் பிடிக்ககடந்த 4 ஆண்டுகளாக மாநில அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் பலனளிக்கவில்லை என்பது வருத்தமானஒன்றாகும்.
வீரப்பன் பதுங்கியிருக்கும் இடம் பற்றி தகவல் கொடுத்தாலோ அல்லது அவனை பிடித்துக் கொடுத்தாலோ ரூ.5கோடி பரிசளிக்கப்படும் என்றார்.












Click it and Unblock the Notifications