மழைக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 10 ஆக உயர்வு

Subscribe to Oneindia Tamil

சென்னை :

தமிழகம் மற்றும் புதுவையில் மழைக்கு இதுவரை 10 பேர் பலியாகியுள்ளனர்.

வங்கக்கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் பரவலாக பல இடங்களில் நல்ல மழைபெய்துள்ளது. இந்த மழையில் அறுந்த விழுந்த மின்கம்பியை மிதித்து 7 பேர் பலியாகியுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் கொளத்தூர் கிராமத்தைச் சேர்ந்த வேம்புலியம்மாள் (60), செங்கல்பட்டு சின்ன அம்மன்கோயில் தெருவை சேர்ந்த பிரபுலால் (35), மகாபலிபுரம் பெருமாள் கோயில் கிராமத்தைச் சேர்ந்த வீரராகவன் (32),வேலூர் மாவட்டத்தில் பொன்னம்மாள் (60) மற்றும் அவரது பேரன் அரவிந்தன் (7),

புதுவையில் ரங்கசாமி, முருகவேல் ஆகியோர் மழையில் அறுந்து விழுந்த மின்கம்பயை மிதித்து பலியானார்கள்.இதுதவிர கொடைக்கானலில் குடிசை வீடு மீது பாறை உருண்டு விழுந்ததில் அன்னக் கொடி என்பவரும்,விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அருகே சிமெண்ட் தளம் இடிந்து விழுந்ததில் ஏழுமலை, முருகன் ஆகியஇரு கட்டடத் தொழிலாளிகளும் இறந்தனர்.

இந் நிலையில் இன்றும் மழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆராய்ச்சி மையம் தெரிவித்துள்ளது.

இதற்கிடையே மழை காரணமாக உதகமண்டலத்தில் நாளை நடக்கவிருந்த குதிரை ரேஸ் தளிவைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+