நம்பிக்கை தளராத துரைமுருகன்!
பெங்களூர்:
குறுவைப் பயிரைக் காப்பாற்ற காவிரியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்ற தங்களது கோரிக்கையைமனிதாபிமான அடிப்படையில் பரிசீலிப்பதாக கர்நாடக முதல்வர் உறுதியளித்ததாக திமுக தலைமை நிலையச்செயலாளர் துரைமுருகன் தெரிவித்தார்.
திமுக கூட்டணிக் கட்சிகளுக்குத் தலைமை வகித்து கர்நாடக முதல்வர் தரம்சிங்கை சந்தித்துவிட்டுத் திரும்பியதுரைமுருகன் நிருபர்களிடம் பேசுகையில்,
தமிழக விவசாயிகளுக்கு உதவுமாறு கர்நாடக அரசைக் கேட்டுக் கொண்டோம். அவர்கள் படும் துயரத்தை எடுத்துச்சொன்னோம். குறுவைப் பயிர் காய்ந்து கொண்டிருப்பதை விளக்கினோம்.
இதை மனிதாபிமானத்துடன் பரிசீலிப்பதாக கர்நாடக முதல்வர் உறுதியளித்தார் என்றார்.
காவிரி ஆணையத்தைக் கூட்ட வேண்டும் என பிரதமர் மன்மோகன் சிங்குக்கு முதல்வர் ஜெயலலிதா கடிதம்எழுதியிருக்கிறாரே? நீங்களும் அந்தக் கோரிக்கையை வலியுறுத்துவீர்களா என்று நிருபர்கள் கேட்டபோது, நோகமெண்ட்ஸ் என்று பதில் தந்தார் துரைமுருகன்.












Click it and Unblock the Notifications