டெல்லி தமிழ்நாடு இல்லத்தில் இடம் மறுக்கப்படும் மத்திய அமைச்சர்கள்டெல்லி:டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர்களுக்கு அறைகளை ஒதுக்காமல் தமிழக அரசு முரண்டு பிடித்து வருகிறது.திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர். வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு அறைகள் ஒதுக்கப்படும். அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கும். தமிழ்நாடு இல்லத்தில் 10 சிறப்பு அறைகள் உள்ளன. இதில் எந்த அறையும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இது தவிர புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதைத் திறந்தால், அமைச்சர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதையும் தமிழக அரசு திறக்காமல் இருப்பதாகத் தெரிகிறது. அறைகளைக் கேட்டு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கும் இதுவரை பதில் தரப்படவில்லை என்று தெரிகிறது. இந்த அறைகள் தமிழகத்தில் இருந்து வரும் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களது பெயர்களில் தமிழக அரசே அறைகளை வேண்டுமென்றை பிளாக் செய்து பூட்டி வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.
டெல்லி:
டெல்லியில் உள்ள தமிழ்நாடு இல்லத்தில் மத்திய அமைச்சர்களுக்கு அறைகளை ஒதுக்காமல் தமிழக அரசு முரண்டு பிடித்து வருகிறது.
திமுக, காங்கிரஸ், பா.ம.கவைச் சேர்ந்த 12 பேர் மத்திய அமைச்சரவையில் இடம் பிடித்துள்ளனர்.
வழக்கமாக தமிழகத்தைச் சேர்ந்த மத்திய அமைச்சர்களுக்கு டெல்லியில் உள்ள தமிழக அரசுக்குச் சொந்தமான தமிழ்நாடு இல்லத்தில் சிறப்பு அறைகள் ஒதுக்கப்படும். அதில் அமைச்சர்களின் அலுவலகங்கள் இயங்கும்.
தமிழ்நாடு இல்லத்தில் 10 சிறப்பு அறைகள் உள்ளன. இதில் எந்த அறையும் மத்திய அமைச்சர்களுக்கு ஒதுக்கப்படவில்லை. இது தவிர புதிய கட்டடம் ஒன்றும் கட்டப்பட்டுள்ளது. அதைத் திறந்தால், அமைச்சர்களுக்கு ஒதுக்க வேண்டியிருக்கும் என்பதால் அதையும் தமிழக அரசு திறக்காமல் இருப்பதாகத் தெரிகிறது.
அறைகளைக் கேட்டு அமைச்சர்கள் விடுத்த கோரிக்கைக்கும் இதுவரை பதில் தரப்படவில்லை என்று தெரிகிறது.
இந்த அறைகள் தமிழகத்தில் இருந்து வரும் நீதிபதிகளுக்காக ஒதுக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவர்களது பெயர்களில் தமிழக அரசே அறைகளை வேண்டுமென்றை பிளாக் செய்து பூட்டி வைத்திருப்பதாக அமைச்சர்கள் கூறுகின்றனர்.












Click it and Unblock the Notifications