நடுரோட்டில் அடித்து, உருண்ட சப் இன்ஸ்பெக்டர்-ஏட்டுகடலூர்:கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் நடுரோடடில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.சப்-இன்ஸ்பெக்டர்ஆப்ரஹாம் குரூசுக்கும் ஏட்டையா செல்வராஜும் கடைவீதியில் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே இருவரும் அடித்துக் கொண்டனர். பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு புரண்டனர். அவர்களை பொது மக்கள் தலையிட்டு பிரித்துவிட்டனர். ஏட்டையா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏட்டையா செல்வராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றார். சென்னை இரவு ரோந்துக்கு தனி கமிஷ்னர்: சென்னையில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்க தனி உதவி கமிஷ்னர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மாநகர போலீசின் புதிய ஆணையர் நடராஜன் கூறியுள்ளார். நிருபர்களிடம் அவர் பேசுகையில், இந்த உதவி கமிஷ்னரின் தலைமையில் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். துணை கமிஷ்னர்களுடன் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உதவி கமிஷ்னர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார் என்றார்.
கடலூர்:
கடலூர் அருகே ஸ்ரீமுஷ்ணம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டரும் ஏட்டையாவும் நடுரோடடில் கட்டிப் புரண்டு சண்டையிட்டனர்.
சப்-இன்ஸ்பெக்டர்ஆப்ரஹாம் குரூசுக்கும் ஏட்டையா செல்வராஜும் கடைவீதியில் வாய்த் தகராறில் ஈடுபட்டனர். வாக்குவாதம் முற்றவே இருவரும் அடித்துக் கொண்டனர்.
பின்னர் இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டு புரண்டனர். அவர்களை பொது மக்கள் தலையிட்டு பிரித்துவிட்டனர். ஏட்டையா போதையில் இருந்ததாகக் கூறப்படுகிறது.
இதையடுத்து அங்கு வந்த இன்ஸ்பெக்டர், ஏட்டையா செல்வராஜைக் கைது செய்து அழைத்துச் சென்றார்.
சென்னை இரவு ரோந்துக்கு தனி கமிஷ்னர்:
சென்னையில் இரவு நேரத்தில் குற்றங்களைத் தடுக்க தனி உதவி கமிஷ்னர் ஒருவர் நியமிக்கப்படுவார் என மாநகர போலீசின் புதிய ஆணையர் நடராஜன் கூறியுள்ளார்.
நிருபர்களிடம் அவர் பேசுகையில், இந்த உதவி கமிஷ்னரின் தலைமையில் இரவு ரோந்துப் பணிகள் தீவிரப்படுத்தப்படும். துணை கமிஷ்னர்களுடன் இரவு 1 மணி முதல் அதிகாலை 4 மணி வரை சென்னை நகரின் அனைத்துப் பகுதிகளிலும் உதவி கமிஷ்னர் ரோந்துப் பணியில் ஈடுபடுவார் என்றார்.












Click it and Unblock the Notifications