காவிரி: மத்திய அரசை திமுக மிரட்ட கூடாது- கெளடா
பெங்களூர்:
காவிரி விஷயத்தில் மத்திய அரசை மிரட்டிப் பணிய வைக்கும் நெருக்கடி நடவடிக்கைகளில் திமுக ஈடுபடக் கூடாது என முன்னாள் பிரதமரும், கர்நாடகத்தில் நடக்கும் கூட்டணி ஆட்சியில் முக்கிய பங்கு வகிக்கும் மதசார்பற்ற ஜனதா தளத்தின் தலைவருமான தேவே கெளடா கூறினார்.
இன்று பெங்களூரில் நிருபர்களிடம் பேசிய அவர்,
பிரதமர் மன்மோகன் சிங்கின் தலையீட்டையடுத்து தமிழகத்துக்குத் தண்ணீர் திறந்துவிட காங்கிரஸ்-மதசார்பற்ற ஜனதா தள கூட்டணி அரசு முடிவு செய்தது. இது முழுக்க நல்லெண்ண அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவு.
மேலும் மத்திய அரசுடன் மோதல் போக்கை கடைபிடிக்க வேண்டாம் என்ற காரணமும் ஒன்று.
அதே நேரத்தில் காவிரி விஷயத்தில், அதிக எம்.பிக்களைக் கொண்ட திமுக அதை வைத்துக் கொண்டு மத்தியில் கூட்டணி அரசுக்கு நெருக்கடி தந்து கொண்டிருக்கக் கூடாது.
எங்களது கட்சிக்கு அதிக எம்.பிக்கள் இல்லாமல் இருக்கலாம். ஆனாலும், அரசியல்ரீதியில் ம.ஜ. தளம் பலவீனமானதல்ல என்றார்.
சமீபத்தில் கெளடாவின் மகன் சென்னையில் முதல்வர் ஜெயலலிதாவை சந்தித்துவிட்டுத் திரும்பியது நினைவுகூறத்தக்கது.












Click it and Unblock the Notifications