திரையுலகினர் ஒன்றுபட டி.ஆர். அழைப்பு
சென்னை:
நடிகர்களுக்குப் பிரச்சினை என்றால் திரையுலகினர் ஒன்று சேர வேண்டும் என்று லட்சிய திமுக தலைவர் டி.ராஜேந்தர் கூறினார்.
இதுதொடர்பாக நிருபர்களிடம் அவர் கூறியதாவது:
கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டால் பேசுவதுடன் நிறுத்திக் கொள்ள வேண்டும். ரஜினிகாந்தில் தொடங்கி விஜயகாந்த் வரை இந்தப் பிரச்சனை தொடர்கிறது. அரசியல் ரீதியாக பாமக நிறுவனர் ராமதாஸூடன் எனக்கு நெருங்கிய நட்பு உண்டு. இந்தப் பிரச்னையில் சமாதானம் ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறேன்.
பாமகவினரால் நடிகர்களுக்குத் தொடர்ச்சியாக பிரச்சனைகள் வருகிறது என்றால் திரையுலகினர் அனைவரும் ஒன்று சேர்ந்து முடிவு எடுக்க வேண்டும். ஆனால் ரஜினிக்குப் பிரச்சனை ஏற்பட்டபோது யாரும் குரல் கொடுக்கவில்லை.
லட்சிய திமுகவுக்கு உறுப்பினர் சேர்க்கும் பணிக்காக வரும் 25ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் சுற்றுப் பயணம் செல்லவிருக்கிறேன். பெட்ரோல், டீசல் விலை உயர்வை எதிர்த்து வரும் 28ம் தேதி காலை வள்ளுவர் கோட்டம் அருகே போராட்டம் நடத்த உள்ளோம். செப்டம்பர் 1ம் தேதி கட்சி அமைப்பாளர்கள் அறிமுகக் கூட்டம் நடைபெற உள்ளது.
கட்சியில் எவ்வளவு பேர் சேர்கிறார்கள் என்பது முக்கியமல்ல. யார் யார் சேர்கிறார்கள் என்பதே முக்கியம். 5 லட்சம் பேரை கணக்கில் கொண்டு 10 லட்சம் பேர் வரை சேர்ப்போம்.
அரசியல் அற்ற அரசியல் என்ற நிலையில் மக்கள் பிரச்சினைகளுக்குக் குரல் கொடுப்பேன். எதிர்க்கட்சித் தலைவர் என்று பெய-ரை விட- எதிர்த்துக் குரல் கொடுப்பவர்களில் முதல் ஆள் என்றாலே போதும் என்று கூறினார்.












Click it and Unblock the Notifications