8 மாத குழந்தைக்கு விஷம் கொடுத்து தாயும் தற்கொலை
Subscribe to Oneindia Tamil
சேலம்:
சேலம் மாவட்டம் காட்டுவளவு பகுதியைச் சேர்ந்த கவிதா என்ற பெண் தனது 8 மாதக் கைக்குழந்தைக்கு விஷம்கொடுத்து கொன்று விட்டு தானும் தற்கொலை செய்து கொண்டார்.
சேலம் மாவட்டம் பொத்தனேரி அருகே உள்ளது காட்டுவளவு கிராமம். இந்தப் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமார்.குடிப்பழக்கம் உடைய இவர் தினசரி குடித்து விட்டு மனைவி கவிதாவை கொடுமைப்படுத்தி வந்துள்ளார்.
கணவன் கொடுமை தாங்க முடியாமல் சித்திரவதைக்குள்ளாகி வந்த கவிதா தற்கொலை செய்து கொள்ள முடிவுசெய்தார். இதையடுத்து 8 மாதமே ஆன தனது கைக்குழந்தைக்கு விஷம் கொடுத்து கொன்றார். பின்னர் அதேவிஷத்தை தானும் அருந்தி தற்கொலை செய்து கொண்டார்.
இந்த சம்பவம் சேலம் மாவட்டத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications