மங்களூர், மைசூர்: சாப்ட்வேர் நகர்களாக்க திட்டம்
பெங்களூர்:
பெங்களூரைத் தொடர்ந்து மைசூர், மங்களூர், ஹூப்ளி-தார்வாட், பெல்காம், குல்பர்கா ஆகியநகர்களிலும் சாப்ட்வேர் தொழிலை விரிவாக்க கர்நாடக அரசு முயன்று வருகிறது.
ஏற்கனவே இன்போசிஸ் உள்ளிட்ட சில முக்கிய நிறுவனங்கள் மைசூர், மங்களூர் ஆகிய இடங்களில்தங்களது கிளைகளைத் தொடங்க முடிவு செய்துள்ளன. இன்போசிஸ் தனது பயிற்சி மையத்தைமைசூரில் அமைக்கவுள்ளது.
ரூ. 126 கோடியிலான இந்த மையத்தில் ஆண்டுக்கு 4,000 சாப்ட்வேர் என்ஜினியர்களுக்கு பயிற்சிஅளிக்க அந் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
இந் நிலையில் பிற சாப்ட்வேர் நிறுவனங்களையும் மாநிலத்தின் இரண்டாம் நிலை நகர்களில்தொழில்களைத் தொடங்க வைக்க கர்நாடக அரசு முயன்று வருகிறது.
இத் தகவலை கர்நாடக தகவல் தொழில்நுட்பம் மற்றும் உயிரித் தொழில்நுட்பத்துறைச் செயலாளர்சங்கரலிங்கே கெளடா தெரிவித்தார். அவர் கூறுகையில்,
சாப்ட்வேர் தவிர பி.பி.ஓ, கால்சென்டர்களையும் இந்த நகர்களில் தொடங்கச் செய்யத் தேவையானஅடிப்படை வசதிகளை அரசு செய்து தரும். இந்த நகர்களில் மிகச் சிறந்த கல்விக் கூடங்கள்,பொறியியல் கல்லூரிகள் உள்ளன.
இதனால், அங்கு தொழில் தொடங்கும் நிறுவனங்களுக்குத் தேவையான ஊழியர்கள் எளிதாகவேகிடைப்பார்கள். பெங்களூர் என்ற பிராண்டை வைத்து மாநிலத்தையே சாப்ட்வேர் தலைமையகமாகமாற்றுவதே எங்கள் திட்டம் என்றார் கெளடா.
தமிழக அரசின் காதுகளில் இதெல்லாம் விழுகிறதா?












Click it and Unblock the Notifications