For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அறிவாலயம்: அரசுக்கு கருணாநிதி பதில்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அண்ணா அறிவாலயத்தின் மொத்த பரப்பளவில் 10 சதவீத இடத்தை பொதுமக்ளுக்கான பூங்காவாகபராமரித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி தமிழக அரசுக்குத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் வீட்டு வசதி வாரிய நகர்ப்புற வளர்ச்சித்துறை செயலாளருக்கு அனுப்பிய கடிதத்தில் கூறிஇருப்பதாவது:-

அரசு விதிகளின்படி அண்ணா அறிவாலயத்தின் மொத்த பரப்பில் 10 சதவீத இடத்தில் அண்ணா பொழுது போக்குபூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடத்தில், எந்தவித கட்டடமும் கட்ட திமுக அறக்கட்டளை முயற்சிக்கவில்லை.

அதன் பிறகு பொதுமக்களின் வசதியைக் கருதி பொதுப் பயன்பாட்டிற்கான இடம் அண்ணா சாலை அருகேமாற்றப்பட்டது.

திமுக அறக்கட்டளை பொதுமக்களுக்கானது. அண்ணா அறிவாலயத்தில் உள்ள பூங்காவும் பொதுமக்களுக்கே.அங்கு பொதுமக்களுக்காக மர பெஞ்சுகளும் போடப்பட்டுள்ளன. பொதுமக்கள் வந்து போவதற்காக பூங்காவில் 2பெரிய நுழைவாயில்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் அரசு செயலாளர் அனுப்பிய நோட்டீசில் உண்மைக்கு மாறாக அரசு நிர்வாகத்தின் மேல்நிலையில்இருப்பவர்களின் அரசியல் காழ்ப்புணர்ச்சி அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. எனவே திமுகஅறக்கட்டளைக்கு அனுப்பிய தங்களது நோட்டீஸ் தொடர்பான அனைத்து நடவடிக்கைகளையும் திரும்பப் பெறவேண்டும் என கேட்டுக் கொள்கிறேன் என்று கருணாநிதி கூறியுள்ளார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X