For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

9 மாணவர்களை கடத்திய இருவர் பிடிபட்டனர்

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அயனாவரம் பகுதியில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 9 மாணவ, மாணவியரை கடத்திபெரும் பரபரப்பூட்டிய பெண்மணியையும் அவரது காதலனையும் போலீஸார் கைது செய்துள்ளனர்.

அயனாவரம், குஜ்ஜி பாபு நகரில் உள்ள மாநகராட்சிப் பள்ளியைச் சேர்ந்த 4 மாணவர்கள், 5 மாணவிகளைதிடீரென்று 2 நாட்களுக்கு முன்பு காணவில்லை. பள்ளிக்குச் சென்ற குழந்தைகள் அங்கு வராத தகவல் அறிந்ததும்பெற்றோர் பீதியடைந்து பள்ளியை முற்றுகையிட்டனர்.

ஒரே நாளில், ஒரே பள்ளியைச் சேர்ந்த 9 குழந்தைகளைக் காணவில்லை என்ற தகவல் சென்னை நகரிலும் பெரும்பரபரப்பை ஏற்படுத்தியது. இந் நிலையில் கடத்தப்பட்டதாகக் கூறப்பட்ட 9 பேரும் ஆட்டோ ஒன்றில் வைத்துமீட்கப்பட்டனர்.

அவர்களிடம் விசாரணை நடத்தியபோது, மலர்விழி என்ற பெண்ணும், சண்முகம் என்பவரும்தான் தங்களைபுதுவைக்குக் கூட்டிச் சென்றதாக 10 பேரும் கூறினர். இதையடுத்து அவர்களைப் பிடிக்க போலீஸ் படைஅமைக்கப்பட்டது.

போலீஸாரின் தீவிர வேட்டையில் மலரும், சண்முகமும் சிக்கிக் கொண்டனர். அவர்கள் கைது செய்யப்பட்டுஅயனாவரம் டி.பி.சத்திரம் காவல் நிலையத்திற்குக் கொண்டு வந்து விசாரிக்கப்பட்டனர்.

விசாரணையின்போது, தான் யாரையும் கடத்தவில்லை என்றும், சம்பந்தப்பட்ட குழந்தைகள் அனைவரும்அவர்களது வீடுகளில் பல கஷ்டங்களை அனுபவித்து வந்ததாகவும், நல்ல வாழ்க்கை வாழ வேண்டும் என்றுதான்தன்னுடன் வந்ததாகவும் மலர் கூறினார். போலீஸார் தொடர்ந்து விசாரித்து வருகிறார்கள்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X