பெங்களூர்: மண்ணில் சிக்கிய மலேசிய விமானம்
Subscribe to Oneindia Tamil
பெங்களூர்:
பெங்களூரில் இருந்து கோலாலம்பூர் கிளம்ப இருந்த மலேசியன் ஏர்வேஸ் விமானம் ரன்வேயில்இருந்து விலகி, அதன் சக்கரங்கள் மண்ணில் புதைந்ததன.
இதனால் பெங்களூர் விமான நிலையத்தில் சுமார் 3 மணி நேரம் விமானப் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.
இன்று காலை 200 பயணிகளை ஏற்றிக் கொண்டு கிளம்பிய அந்த விமானம் ரன்வேயின் முனையில்சென்று திரும்பும்போது, அதிலிருந்து விலகி ஓடி, பின் சக்கரங்கள் மண்ணில் புதைந்தன.
இதையடுத்து பயணிகள் அனைவரும் இறக்கிவிடப்பட்டனர். விமானத்தை மீண்டும் ரன்வேக்குக்கொண்டு வரப்பட்டுவிட்டது. இச் சம்பவத்தால் சுமார் மூன்று மணி நேரம் பெங்களூர் விமானநிலையத்தில் எந்த விமானமும் தரையிறங்கவோ, கிளம்பிச் செல்லவோ முடியவில்லை.












Click it and Unblock the Notifications