நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்தன
டெல்லி & சென்னை:
ஊதிய உயர்வு கோரி பொதுத் துறை வங்கி ஊழியர்கள் இன்று நாடு தழுவிய அளவில் ஒரு நாள் அடையாளவேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனால் நாடு முழுவதும் வங்கிப் பணிகள் ஸ்தம்பித்துப் போயின. அதே நேரத்தில் பொதுத் துறை வங்கிகளின்ஏ.டி.எம்கள் வழக்கம்போல் செயல்பட்டன.
தமிழகத்தில் பல்வேறு வங்கிகளின் சுமார் 4,100 கிளைகள் மூடப்பட்டதால் வங்கிப் பணிகள் கடுமையாகபாதிக்கப்பட்டன.
ஊதிய உயர்வு மற்றும் சில சலுகைகள் கோரி 9 முக்கிய சங்கங்களைச் சேர்ந்த ஊழியர்களும் அதிகாரிகளும் இந்தப்போராட்டத்தில் ஈடுபட்டனர். பொதுத் துறை வங்கிகள் தவிர சில தனியார் வங்கி ஊழியர்களும் இதில்பங்கேற்றனர்.
இடதுசாரிகள், காங்கிரஸ், பாஜக, சங் பரிவார் அமைப்புகளில் பதிவு செய்யப்பட்ட வங்கி ஊழியர் சங்கங்களும்இதில் அடக்கம்.
ஆனால், எச்.டி.எப்.சி, ஐசிஐசிஐ, யுடிஐ, இன்டஸ்இன்ட் ஆகிய இந்திய தனியார் வங்கிகளும், எச்.எஸ்.பி.சி,ஸ்டாண்டர்ட் சார்ட்டர்ட் ஆகிய வெளிநாட்டு வங்கிகளும் வழக்கம்போல் செயல்பட்டன.
தங்களது கோரிக்கைகளை உடனே மத்திய அரசு நிறைவேற்றாவிட்டால், நாளை மும்பையில் கூடும் சங்கங்களின்கூட்டத்தில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு செய்யப்படும் என்றும், செப்டம்பர் மாதம் தொடர்ந்து இருநாட்கள் வேலை நிறுத்தத்தில் குதிப்போம் என்றும் பொதுத்துறை வங்கி ஊழியர்கள் சங்கம் எச்சரித்துள்ளது.
இன்றைய போராட்டத்தில் நாடு முழுவதும் சுமார் 14 லட்சம் வங்கி ஊழியர்கள் ஈடுபட்டிருந்தனர்.












Click it and Unblock the Notifications