டெல்லி ஜெ: தமிழ்நாடு இல்ல கட்டடம் திறப்பு

Subscribe to Oneindia Tamil

டெல்லி& சென்னை:

டெல்லியில் கட்டப்பட்டுள்ள தமிழ்நாடு இல்லத்தின் புதிய விருந்தினர் மாளிகையை முதல்வர் ஜெயலலிதா இன்றுதிறந்து வைத்தார்.

நேற்றிரவு 8.20 மணிக்கு இந்தியன் ஏர்லைன்ஸ் விமானத்தில் தோழி சசிகலாவுடன் டெல்லி சென்றஜெயலலிதாவை விமான நிலையத்தில் அமைச்சர்கள், அதிகாரிகள் வழியனுப்பி வைத்தனர். மத்தியில் காங்கிரஸ்தலைமையில் புதிய அரசு அமைந்த பிறகு ஜெயலலிதா டெல்லி சென்றுள்ளது இதுவே முதன்முறையாகும்.

இப் பயணத்தின் போது பிரதமர் மன்மோகன் சிங்கை சந்திக்கத் திட்டமிட்டுள்ள ஜெயலலிதா, தமிழக திட்டங்கள்குறித்து விவாதிக்கவுள்ளார்.

இன்று காலை சாணக்கியபுரியில் உள்ள தமிழ்நாடு இல்ல வளாகத்தின் அருகே ரூ.27 கோடி செலவில்கட்டப்பட்டுள்ள புதிய தமிழ்நாடு இல்ல விருந்தினர் மாளிகையை ஜெயலலிதா திறந்து வைத்தார். இந் நிகழ்ச்சியில்பொதுப் பணித்துறை அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். பின்னர் அந்த இல்லத்தை ஜெயலலிதாசுற்றிப் பார்த்தார்.

Jaya inagurates Tamilnadu guest house in Delhi
சனிக்கிழமை விஞ்ஞான பவனில் நடைபெறும் மாநில முதல்வர்கள் -மற்றும் உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதிகள்மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

தனது வெளிநாட்டுப் பயணத்துக்கான சில முக்கிய உதவிகளை அவர் மத்திய அரசிடம் கேட்கக் கூடும் என்றுதெரிகிறது. அவர் கேட்கும் அளவுக்கு அன்னியச் செலாவணி ஒதுக்குவதிலும், மூத்த அதிகாரிகள் உள்பட 18பேருக்கு 2 மாத காலத்துக்கு வெளிநாடு செல்ல அனுமதிப்பதிலும் மத்திய அரசு சுணக்கம் காட்டி வருகிறது.

இந்த விஷயத்தை பிரதமருடன் பேசவுள்ளார் ஜெயலலிதா. அதன் பின்னரும் மத்திய அரசு இறங்கி வராவிட்டால்,தனது வெளிநாட்டுப் பயணத்தை ஒத்தி வைத்துவிட்டு சென்னை போரூரில் உள்ள முக்கியமான தனியார்மருத்துவமனையிலேயே அவர் சிகிச்சை எடுத்துக் கொள்ளக் கூடும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+