கர்நாடக அதிரடிப் படையினருக்கும் பரிசு மழை
பெங்களூர்:
வீரப்பன் தேடுதல் வேட்டையில் ஈடுபட்ட கர்நாடக அதிரடிப்படையினர் 900 பேருக்கு அவர்களின் சொந்த ஊரில்இலவச வீட்டுமனை வழங்கப்படும் என்று கர்நாடக முதல்-வர் தரம்சிங் அறிவித்தார்.
வீரப்பன் கொல்லப்பட்ட சம்பவத்தில் கர்நாடக அதிரடிப்படையினரின் பங்களிப்பு நேரடியாக இல்லாவிட்டாலும்,அவன் தொடர்பான உளவு நடவடிக்கைகளில் தமிழக அதிரடிப்படைக்கு முழு ஒத்துழைப்பு அளித்து வந்தது.
வீரப்பனை வீழ்த்திய தமிழக அதிரடிப்படையினருக்கு முதல்வர் ஜெயலலிதா ரூ.3 லட்சம் ரொக்கப்பரிசு, பதவிஉயர்வு மற்றும் வீட்டு மனை வழங்க உத்தரவிட்டார்.
அதேபோல் கர்நாடக அதிரடிப் படையினரின் பணியைப் பாராட்டி, அவர்களின் சொந்த ஊரில் வீட்டுமனைவழங்கப்படும் என்று தரம்சிங் அறிவித்துள்ளார். அவர்கள் கூறுகையில், இதன் மூலம் 900 அதிரடிப் படையினர்பயன் அடைவார்கள். வீரப்பன் தலைக்கு அறிவிக்கப்பட்ட ரூ.5 கோடி குறித்து விரைவில் முடிவு அறிவிக்கப்படும்என்றார்.
இந்தப் பணமும் பிரித்து அதிரடிப்படையினருக்கே வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.