For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

பாண்டிச்சேரியில் கலாம்; சட்டசபையில் இன்று உரை

By Staff
Google Oneindia Tamil News

பாண்டிச்சேரி:

குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் இன்று புதுவை வந்து சேர்ந்தார். அங்கு சட்டசபைக் கூட்டத்தில்அவர் சிறப்புரையாற்றுகிறார்.

பாண்டிச்சேரி யூனியன் பிரதேசம், பிரான்ஸ் காலணி ஆதிக்கத்திலிருந்து விடுபட்டு இன்றுடன் 50 ஆண்டுகள்முடிகிறது. இதையொட்டி சட்டசபையின் சிறப்புக் கூட்டத்திற்கு அங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் அப்துல்கலாம் உரை நிகழ்த்துகிறார்.

இதற்காக இன்று காலை அவர் சிறப்பு விமானத்தில் சென்னை வந்தார். விமான நிலையத்தில் தமிழக ஆளுநர்ராம்மோகன் ராவ், அமைச்சர்கள் பொன்னையன், ஓ.பன்னீர் செல்வம், தலைமைச் செயலாளர் லட்சுமி பிரானேஷ்ஆகியோர் கலாமை வரவேற்றனர்.

பின்னர் அங்கிருந்து ராணுவ ஹெலிகாப்டர் மூலம் கலாம் புதுவை சென்றார். புதுவை விமான நிலையத்தில் அப்துல்கலாமை, புதுவை துணை நிலை ஆளுநர் லகேரா, முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள் ஆகியோர் கலாமைவரவேற்றனர்.

பின்னர் அவர் புதுவை மத்திய பல்கலைக்கழகத்தின் 15வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டார். அங்குஅவர் பேசுகையில்,

தற்போது இந்தியாவால் எந்தவிதமான செயற்கைக்கோளையும், அவற்றை ஏவும் ராக்கெட்களையும் தயாரிக்கமுடியும். அதற்கான தொழில்நுட்பத்தையும், மனித வளத்தையும் இந்தியா பெற்றுள்ளது.

நமது வளர்ச்சிக்கு முக்கிய தடையாக ஊழல் இருக்கிறது. அதற்கு எதிராக சட்டம் இருந்தாலும், அதனால் முழு பலன்கிடைக்கவில்லை. இளைஞர்கள் ஊழலுக்கு எதிராக ஒரு இயக்கத்தை தொடங்க வேண்டும் என்று கூறினார்.

அதன் பின்னர் மணிக்கு புதுவை சட்டசபையின் சிறப்புக் கூட்டத்தில் கலாம் உரை நிகழ்த்தவுள்ளார்.

கலாம் புதுவை வந்துள்ளதையடுத்து அங்கு பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X