வீரப்பன் ஆதரவாளர்கள் மிரட்டல்; சேலத்தில் பதற்றம்
ஈரோடு:
வீரப்பன் சாவுக்குப் பழிவாங்கும் விதமாக கன்னியாகுமரி-மும்பை எக்ஸ்பிரல் ரயில் குண்டு வைத்துத் தகர்க்கப்படும் எனஈரோடு, சேலம் ரயில் நிலையங்களுக்கு தொலைபேசி மிரட்டல் வந்ததால் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டது.
ஈரோடு ரயில் நிலைய மாஸ்டருக்கும், சேலம் ரயில் நிலைய மாஸ்டருக்கும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் பேசியவர்தான் மேட்டூரிலிருந்து பேசுவதாகவும், தமிழர் விடுதலைப் படையைச் சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார்.
பின்னர், வீரப்பனை அநயாயமாக கொன்ற தமிழக காவல்துறைக்குப் பாடம் புகட்டும் வகையில், ஈரோடு டீசல் ரயில்பெட்டிபணிமனை மற்றும் கன்னியாகுமரி-மும்பை, ஈரோடு-கன்னியாகுமரி ரயில்களை குண்டு வைத்துத் தகர்க்கப் போவதாகதெரிவித்து விட்டு போனை வைத்து விட்டார்.
இதையடுத்து இரு ரயில் நிலையங்களிலும் பரபரப்பு ஏற்பட்டது. போலீஸாருக்குத் தகவல் தரப்பட்டது. அந்த சமயத்தில்கன்னியாகுமரியிலிருந்து மும்பை செல்லும் எக்ஸ்பிரஸ் ரயில் சேலம் ரயில் நிலையத்திற்கு வந்தது. அந்த ரயிலை நிறுத்திஒவ்வொரு பெட்டியாக போலீஸார் தீவிர சோதனை நடத்தினர். என்ஜினிலும் சோதனை நடத்தப்பட்டது.
இறுதியில் அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று தெரிய வந்தவுடன் ரயில் புறப்பட அனுமதிக்கப்பட்டது. இதேபால,ஈரோடு ரயில் நிலையத்திலும் தீவிர சோதனை நடத்தப்பட்டது.
இந்த வெடிகுண்டு மிரட்டல் தகவலால் ஈரோடு,சேலம் ரயில் நிலையங்களில் போலீஸார் குவிக்கப்பட்டிருந்தனர்.