For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

சிட்டகாங் டெஸ்ட் போட்டிக்கு மத்திய அரசு அனுமதி

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி :

பாதுகாப்பு ஏற்பாடுகள் திருப்திகரமாக இருப்பதாக பாதுகாப்புக் குழுவினர் அளித்த அறிக்கையையடுத்து, நாளை சிட்டகாங்கில்நடைபெறும் போட்டியில் பங்கேற்க இந்திய கிரிக்கெட் அணிக்கு மத்திய அரசு அனுமதி அளித்தது.

தீவிரவாதிகள் மிரட்டல் விடுத்துள்ள நிலையில், 2 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகளில் விளையாட இந்திய கிரிக்கெட் அணி நேற்றுடாக்கா சென்றது. நாளை முதல் டெஸ்ட் போட்டி சிட்டகாங் நகரில் தொடங்குகிறது.

இதனையடுத்து சிட்டகாங் நகருக்கு சென்ற இந்திய பாதுகாப்புக் குழுவினர், இந்திய வீரர்கள் தங்கும் ஹோட்டல், போட்டி நடக்கும் இடம்ஆகியவற்றில் செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர்.

பின்னர் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து திருப்தியளிப்பதாக மத்திய அரசுக்கு அறிக்கை அனுப்பினர். இதனையடுத்து நாளைய போட்டியில்பங்கேற்க இந்திய அணிக்கு மத்திய அரசு இன்று அனுமதியளித்தது.

இதனை வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நவ்தேஜ் சர்ணா நிருபர்களிடம் தெரிவித்தார். பாதுகாப்பை பலப்படுத்தும் பொருட்டும்இந்திய பாதுகாப்பு குழுவினர் தெரிவித்த யோசனைகளை வங்கதேசம் ஏற்றுக்கொண்டதாக அவர் தெரிவித்தார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X