ஜெவுக்கு ஜெகவீரபாண்டின் ஆதரவு!
Subscribe to Oneindia Tamil
சென்னை:
ஜெயலலிதாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை ஜீரணிக்க முடியாமல் தான் திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்குக் கூட்டணிமக்களை திசை திருப்பும் வகையில் நாளை போராட்டத்தை அறிவித்துள்ளதாக சமூக நீதிக் கட்சியின் தலைவர் ஜெகவீரபாண்டியன் குற்றம்சாட்டியுள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்து திமுக தலைமையிலான கூட்டணி நாளை போராட்டம்அறிவித்துள்ளது.
வீரப்பன் சுட்டு வீழ்த்தப்பட்டது, புதிய வீராணம் திட்டத்தின் வெற்றி, ஜெயேந்திரர் கைதால் மக்கள் மத்தியில் ஜெயலலிதாவுக்கும், தமிழகஅரசுக்கும் செல்வாக்கு பெருகியிருப்பதை கருணாநிதியால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை.
இதனால்தான் மக்களை திசை திருப்பும் விதமாக நாளை போராட்டத்தை அறிவித்துள்ளார். இந்த போராட்டத்தை மக்கள் நிராகப்பார்கள்என்று கூறியுள்ளார் அவர்.












Click it and Unblock the Notifications