விரைவில் அமைதி பேச்சு தொடங்கும்: கதிர்காமர்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
விடுதலைப் புலிகளுக்கும், இலங்கை அரசுக்கும் இடையேயான அமைதிப் பேச்சுவார்த்தை விரைவில் தொடங்க முயற்சிக்கப்பட்டுவருகிறது என்று இலங்கை வெளியுறவு அமைச்சர் லட்சுமண் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.
இந்தியா வந்திருந்த கதிர்காமர் கொழும்பு திரும்பும் வழியில் இன்று காலை சென்னை வந்தார். அங்கு விமான நிலையத்தில்செய்தியாளர்களிடம் பேசுகையில், தடைபட்டுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது.விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என நம்புகிறோம்.
விடுதலைப் புலிகளுடன் இலங்கை அரசு செய்து கொண்டுள்ள போர் நிறுத்தம் தொடர்ந்து நீடிக்கும்.
சேது சமுத்திரத் திட்டம் குறித்து இலங்கை அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை.
தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் தாக்கப்படுவது குறித்து ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் கதிர்காமர்.












Click it and Unblock the Notifications