ஜெவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்: இல.கணேசன்
சென்னை:
சங்கராச்சாரியாரை விடுதலை செய்யக் கோரியும், சங்கரராமன் கொலை வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்றக் கேரியும் பா.ஜ.க, விஸ்வஇந்து பரிஷத் உள்ளிட்ட சங் பரிவார் அமைப்புகளைச் சேர்ந்தவர்கள் இன்று தமிழகத்தின் மாவட்டத் தலைநகர்களில் ஆர்ப்பாட்டம்நடத்தினர்.
சென்னை கலெக்டர் அலுவலகத்தின் எதிரே நடந்த முரசு கொட்டி போராட்டம் நடத்தப்பட்டது.
காஞ்சிபுரத்தில் பா.ஜ.க. தேசியச் செயலாலர் இல.கணேசன் தலைமையில் போராட்டம் நடந்தது. அப்போது அவர் பேசியதாவது:
இந்துக்களுக்கு பாதிப்பு என்றால் ஆர்.எஸ்.எஸ், பா.ஜ.க ஆகியவை ஓடி வரும். சங்கராச்சாரியாரை மன வேதனையுடன் தான் கைதுசெய்ததாகச் சொல்கிறார் ஜெயலலிதா. அப்படியெனில் இரவோடு இரவாக தனி விமானத்தை ஆந்திராவுக்கு அனுப்பி அவரைக் கைதுசெய்தது ஏன்?
இது சரியா? இதற்குப் பெயர் தான் வருத்தமான, வேதனையான செயலா?
காஞ்சிபுரம் எம்.எல்.ஏ. மறைந்ததைதயடுத்து இங்கு இடைத்தேர்தல் நடக்கவிருக்கிறது. அந்தத் தேர்தலில் ஜெயலலிதாவுக்கு மக்கள்சரியான பாடம் புகட்டுவார்கள் என்றார் கணேசன்.
சென்னை போராட்டத்தில் பேசிய மாநிலப் பொதுச் செயலாளர் குமாரவேலு,
கொலை வழக்கு என்று சங்கராச்சாரியாரைக் கைது செய்துவிட்டு இப்போது சங்கர மடத்தின் சொத்துக் கணக்கு, யார் யார் வந்தார்கள்என்று விசாரணையை எங்கெங்கோ கொண்டு போய்க் கொண்டிருக்கிறார்கள்.
இதனால் இந்த மொத்த வழக்கையும் வேறு மாநிலத்துக்கு மாற்றுவதே சரியாக இருக்கும் என்றார்.
இன்று பா.ஜ.க. நடத்திய போராட்டத்துக்கு பெரும்பாலான இடங்களில் போதிய வரவேற்பு இல்லை. இதனால் கூட்டமில்லாமல்போராட்டம் பல மாவட்டங்களில் பிசுபிசுத்தது.












Click it and Unblock the Notifications