ஜெயலலிதா நாளை பெரம்பலூர் பயணம்
Subscribe to Oneindia Tamil
சென்னை:
முதல்வர் ஜெயலலிதா நாளை பெரம்பலூருக்குச் செல்கிறார். அங்கு கொள்ளிடத்திலிருந்து சென்னைக்கு குடிநீர்எடுப்பதற்கான கிணறுகள் தோண்டும் பணி தொடக்கம் உள்ளிட்ட ரூ. 590 கோடி மதிப்பிலான திட்டப் பணிகளைஅவர் தொடங்கி வைக்கிறார்.
முதல்வர் ஜெயலலிதா நாளை பெரம்பலூர் செல்கிறார். அங்கு 493 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார்.8,570 திட்டப் பணிகளை தொடங்கி வைக்கிறார். 20,025 பேருக்கு நலத் திட்ட உதவிகளையும் அவர் வழங்குகிறார்.
இதுதவிர கொள்ளிடம் ஆற்றில் 3 ஆழ்துளைக் கிணறுகள் தோண்டும் பணியையும் முதல்வர் தொடங்கி வைக்கிறார்.இங்கிருந்து எடுக்கப்படும் தண்ணீர் சென்னைக்குக் கொண்டு செல்லப்படவுள்ளது. புதிய வீராணம் திட்டத்தின்விரிவாக்கத் திட்டமாகும் இது.
ஜெயலலிதாவின் பயணத்தின்போது மொத்தம் ரூ. 590 கோடி மதிப்பிலான திட்டங்கள் தொடங்கிவைக்கப்படவுள்ளன.












Click it and Unblock the Notifications