ஜெயலட்சுமி: அதிகாரிகள் டிஸ்மிஸ்ஸா? ஐ.ஜி. மறுப்பு
மதுரை:
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக காவல்துறை அதிகாரிகள் யாரையும் டிஸ்மிஸ் செய்யவோ, இடமாற்றம் செய்யவோ டிஜிபிக்குபரிந்துரை செய்யவில்லை என்று தென் மண்டல ஐ.ஜி. ராஜேந்திரன் மறுத்துள்ளார்.
ஜெயலட்சுமி விவகாரம் தொடர்பாக புகார் கூறப்பட்ட காவல்துறை அதிகாகள் 8 பேரை டிஸ்மிஸ் செய்யவும், 14 அதிகாரிகளைஇடமாற்றம் செய்யவும், அதிகாரம் இல்லாத இடங்களுக்கு பணியில் அமர்த்தவும் பரிந்துரை செய்து டிஜிபிக்கு ஐ.ஜி. ராஜேந்திரன்அறிக்கை அனுப்பியுள்ளதாக கூறப்பட்டது.
ஆனால் இந்தத் தகவல்களை ராஜேந்திரன் மறுத்துள்ளார். இந்தத் தகவல் தவறானது. இதுபோல எந்த அறிக்கையும் டிஜிபிக்குஅனுப்பப்படவில்லை, இது வெறும் வதந்தியான தகவல் என்றார் அவர்.
ஐ.ஜி.ராஜேந்திரன் அனுப்பியதாக கூறப்படும் பட்டியலில் டிஎஸ்பி ராஜசேகர், இன்ஸ்பெக்டர்கள் இளங்கோவன், மலைச்சாமி, சப்இன்ஸ்பெக்டர் ஷாஜகான், ஏட்டு கண்ணன் ஆகியோர் நிரந்தரமாக பணிநீக்கம் செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications