தாதா வீரமணியின் படா தோஸ்த் அப்பு!
சென்னை:
| சங்கரராமன் கொலை வழக்கில் முக்கியக் குற்றவாளியான அப்பு, போலீசாரால் கொல்லப்பட்ட வீரமணியுடன் மிக நெருக்கமாக இருந்துவந்துள்ளான்.
வீரமணியே அப்புவைக் கண்டால் கை கட்டி நிற்பது தான் வழக்கமாம். அந்த அளவுக்கு தாதா உலகில் முடிசூடா மன்னனாகவே வலம்வந்திருக்கிறான் அப்பு. சென்னையின் முக்கிய ஹோட்டல் ஒன்றின் உரிமையாளர் ஒருவர் மூலமாகத் தான் இருவரும் நட்பாகியுள்ளனர். இந்த ஹோட்டல்உரிமையாளரின் முக்கிய தொழில்களில் ஒன்று நடிகைகளை வைத்து விபச்சாரம் நடத்துவது. |
அந்த வகையில் அப்பு, வீரமணிக்கு இந்த ஹோட்டல் உரிமையாளர் பல நடிகைகளை சப்ளை செய்துள்ளார். இவரது ஹோட்டலில்வைத்துத் தான் அப்பு, வீரமணியின் கோஷ்டியினர் குடித்து, ஆட்டம் போட்டுவிட்டு, கடத்தல் மற்றும் கொலைத் திட்டங்களுக்கு பிளான்போட்டுவிட்டுக் கலைவது உண்டாம்.
இடையே நடிகைகள், கால் கேர்ள்களை ருசி பார்த்துள்ளனர்.
எண்கெளன்டரில் வீரமணியைப் போட்டுத் தள்ளுவதற்கு முன்பே அப்புவைத் தான் முதலில் குறி வைத்திருக்கிறது போலீஸ். ஆனால், சங்கரமடத்தின் தலையீட்டால் தப்பிவிட்டான் அப்பு.
அப்புவைப் பிடிக்க வெள்ளைதுரை டீம் ஒரு பக்கம் களத்தில் இறங்கியுள்ள நிலையில், அப்புவிடம் க்யூ பிராஞ்ச் போலீஸ் அதிகாரி ஒருவர்தனது காண்ட்டாக்ட்கள் மூலம் தொடர்ந்து பேசி வருவதாகவும், அவனை சரணடைய வைக்க தொடர்ந்து முயற்சித்து வருவதாகவும்கூறப்படுகிறது.