ஜெயலட்சுமி: ஒரு வழக்கை முடித்தது சிபிஐ

Subscribe to Oneindia Tamil

மதுரை:

Jayalakshmiஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்ட வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்து விட்டதாகத் தெரிகிறது. விரைவில்இதுதொடர்பான இறுதி அறிக்கை மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் தாக்கல் செய்யப்படும் என்று தெரிகிறது.

போலீஸார் தன்னை பாலியல் கொடுமைப்படுத்தியது தொடர்பான ஜெயலட்சுமியின் புகாரையும், அவரது குடும்பத்தினரை கடத்தியதாகஜெயலட்சுமியின் தந்தை அழகிசாமி கொடுத்துள்ள புகாரையும் சிபிஐ விசாரித்து வருகிறது.

இதில் ஜெயலட்சுமியின் குடும்பத்தினர் கடத்தப்பட்டதாகக் கூறப்படும் வழக்கின் விசாரணையை சிபிஐ அதிகாரிகள் முடித்து விட்டதாகதெரிகிறது. விரைவில் இந்த வழக்கின் விசாரணை அறிக்கையை மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் சிபிஐ அதிகாரிகள் தாக்கல்செய்வார்கள் என்று கூறப்படுகிறது.

கடத்தல் வழக்கில் இதுவரை மொத்தம் 45 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. 25க்கும் மேற்பட்ட ஆவணங்கள், ஆதாரங்கள்திரட்டப்பட்டுள்ளன. விசாரணை இறுதிக் கட்டத்தில் இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விசாரணையின்போது முக்கிய திருப்பமாக தனக்கும், ஜெயலட்சுமிக்கும் கடந்த 8 ஆண்டுகளாக எந்தவிதத் தொடர்பும் இல்லை என்றுஅழகிசாமி தெரிவித்திருந்த தகவல் பொய்யானது என்பதை சிபிஐ கண்டுபிடித்துள்ளது.

தற்போது வரை ஜெயலட்சுமியுடன் அவருக்குத் தொடர்பு இருப்பதாக சிபிஐ அதிகாரிகள் தங்களது விசாரணையின்போது தெரிந்துகொண்டுள்ளனர்.

இதற்கிடையே, ஜெயலட்சுமி கொடுத்த புகாரில் சிக்கியுள்ள போலீஸ் அதிகாரிகள் மற்றும் காவலர்களிடம் விரைவில் சிபிஐ தனதுவிசாரணையைத் தொடங்கும் எனத் தெரிகிறது. ஆனால் அதற்கு முன்பாகவே அவர்களில் பெரும்பாலானவர்களை அரசு டிஸ்மிஸ் செய்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+