தளவாய் மீதான புகார்: அரசுக்கு நீதிமன்ற நோட்டீஸ்
சென்னை:
பெண் டாக்டரிடம் பாலியல் கொடுமை செய்ததாக எழுந்துள்ள புகாரின் பேரில் தமிழக அரசும், காவல்துறையும் இதுவரைஎடுத்த நடவடிக்கைகள் குறித்து வருகிற 27ம் தேதிக்குள் தெரிவிக்க வேண்டும் என்று கூறி தமிழக அரசுக்கும், சென்னை மாநகரகாவல்துறை ஆணையருக்கும் சென்னை உயர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
சென்னை கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவமனையில் பணியாற்றி வந்தவர் டாக்டர் கோமதி. இவர் சமீபத்தில் சென்னை மாநகரகாவல்துறை ஆணையர் நடராஜிடம் கொடுத்த புகாரில், சுகாதாரத் துறை அமைச்சர் தளவாய் சுந்தரம் தன்னிடம் தவறான முறையில் நடக்கமுயற்சித்ததாகவும், தகாத உறவுக்கு அழைத்ததாகவும் கூறியிருந்தார்.
அதற்கு தான் மறுப்பு தெரிவித்ததால் அடித்து துன்புறுத்தியதாகவும், இடமாற்றம் செய்து உத்தரவிட்டதாகவும் கூறியிருந்தார். இந்தப்புகாரின் பேரில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் சிபிஐ வழக்கு கோரி கோமதி வழக்குப் பதிவு செய்தார்.
இந்த மனு மீது இன்று நீதிபதி முருகேசன் விசாரணை நடத்தினார். அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், கோமதி மனநலம்பாதிக்கப்பட்டவர் என்று கூறினார்.
விசாரணையின் இறுதியில் வருகிற 27ம் தேதிக்குள், வன்கொடுமை சட்டத்தின் கீழ் கோமதி பதிவு செய்த புகாரின் மீது இதுவரைஎடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பதை தெரிவிக்குமாறு தமிழக அரசு மற்றும் காவல்துறைக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications