விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பலி
Subscribe to Oneindia Tamil
மதுரை:
மதுரை கப்பலூர் அருகே ரிங் ரோட்டில் நடந்த சாலை விபத்தில் 3 ஐயப்ப பக்தர்கள் பரிதாபமாகப் பலியாயினர்.
மதுரை அவனியாபுரத்தைச் சேர்ந்த பக்தர்கள் சபரிமலைக்குச் சென்று விட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தனர். இன்று காலை இந்த பக்தர்கள்வந்து கொண்டிருந்த வேன் ரிங்ரோட்டில் சென்றபோது எதிரே வந்த லாரி பயங்கரமாக மோதியது.
இதில் 3 ஐயப்ப பக்தர்கள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாகப் பலியாயினர். பலியானவர்கள் விவரம்:
1.பழனிவேல் என்ற ஆசிரியர்
2. ஜெயராமன் என்ற டாக்டர்
3. மற்றொருவர் பெயர் விவரம் தெரியவில்லை.
செல்வக்குமார், சரவணபெருமாள், சந்திரசேகர், அஸ்விதாஸ்ரீ ஆகிய நான்கு பேர் பலத்த காயமடைந்தனர். இவர்கள் தனியார்மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.












Click it and Unblock the Notifications