ஆட்சியில் பங்கு கேட்கும் காங்!
திருச்சி : தமிழகத்தில் அடுத்து அமையவிருக்கும் ஆட்சியில் காங்கிரசும் இடம்பெறும் என்று அக் கட்சியின் சட்டமன்ற தலைவர் பாலசுப்ரமணியம்தெரிவித்தார்.
வைகுண்ட ஏகாதசியை முன்னிட்டு திருச்சி ஸ்ரீரங்கம் கோயிலுக்கு வந்திருந்த அவர் நிருபர்களைச் சந்தித்தார். அப்போது அவர்கூறியதாவது:
திருவரங்கம் ரெங்கநாதர் ஆலயத்தில் சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சியில் பக்தர்கள் கூட்டத்தை விட போலீஸ் கூட்டம் தான் அதிகம்இருந்தது. எல்லா இடத்தையும் போலீஸ் தான் ஆக்கிரமித்திருந்தது. யாரை விட வேண்டுமோ அவர்களை விட்டுவிட்டு போலீசார் தான்எல்லா இடத்தையும் ஆக்கிரமித்தனர்.
தமிழக அரசின் நடவடிக்கைகளிலிருந்து வீராணம் திட்டம் வெற்றி பெறவில்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. அது ஒரு வீணானதிட்டம். முறையாக ஆய்வு செய்யாமல் அவசரப்பட்டு தவறு செய்துவிட்டார்கள்.
தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு திருப்திகரமாக இல்லை.
பா.ஜ.கவில் உட்கட்சிப் பூசல் வெடித்துள்ளது. அதை திசை திருப்பத்தான் ஜெயேந்திரர் விஷயத்தை ஊதிப் பெரிதாக்குகிறார்கள்.
தமிழகத்தில் அடுத்து கூட்டணி ஆட்சி தான் ஏற்படும். அடுத்து தமிழகத்தில் அமையவிருக்கும் அமைச்சரவையில் காங்கிரஸ் இடம்பெறும்,அதன்மூலம் காங்கிரஸ் ஆட்சி அமையும் என்றார். அதிமுக ஆட்சியே அடுத்து நடைபெற்றாலும் அதிலும் காங்கிரஸ் அங்கம் வகிக்குமாஎன்ற கேள்விக்கு எஸ்ஆர்பி பதிலளிக்க மறுத்து விட்டார்.












Click it and Unblock the Notifications