இப்போதைக்கு காஞ்சியில் இடைத்தேர்தல் இல்லை
சென்னை:
காலியாக உள்ள காஞ்சிபுரம் சட்டசபைத் தொகுதிக்கு உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் இல்லை என்று தலைமைத் தேர்தல்ஆணையர் டி.எஸ். கிருஷ்ணமூர்த்தி தெரிவித்தார்.
சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிருஷ்ணமூர்த்தி கூறியதாவது:
தேர்தல் விதிகளை மீறும் அரசியல் கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்க தேர்தல் ஆணையம் தயங்காது. தேர்தல் சமயத்தில் ரயில்வே துறைஅமைச்சர் லாலு பிரசாத் யாதவ் பிகார் மக்களுக்கு பணம் கொடுத்தது தொடர்பாக அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டுள்ளது.
தமிழக தலைமை தேர்தல் அதிகாரியாக இருந்த மிருத்யுஞ்சய் சாரங்கி வேறு மாநிலத்திற்கு மாற்றப்பட்டதையடுத்து ஏற்பட்டுள்ளகாலியிடத்தை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
காஞ்சிபுரம் அதிமுக எம்.எல்.ஏ. திருநாவுக்கரசு இறந்ததையடுத்து அத் தொகுதியில் உடனடியாக இடைத்தேர்தல் நடத்தும் எண்ணம் ஏதும்இல்லை என்றார்.












Click it and Unblock the Notifications