பெண் காவலர்கள் எண்ணிக்கை: தமிழகம் முதலிடம்
சென்னை:
இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் பெண் காவலர்கள் எண்ணிக்கை அதிக அளவில் உள்ளது.
நாட்டிலேயே அனைத்து மகளிர் காவல் நிலையத்தை முதன் முதலில் உருவாக்கியது தமிழகம்தான். கடந்த ஜெயலலிதாஆட்சியின்போதுதான் அனைத்து மகளிர் காவல் நிலையம் உருவாக்கப்பட்டது.
அதைத் தொடர்ந்து மாநிலம் முழுவதும் அனைத்து மகளிர் காவல் நிலையங்களை தொடங்கினார் ஜெயலலிதா. அதேபோல நாட்டிலேயேமுதல் முறையாக முற்றிலும் பெண்களை மட்டுமே கொண்ட கமாண்டோ படையும் தற்போதைய ஜெயலலிதா ஆட்சியில்உருவாக்கப்பட்டது.
தற்போது நாட்டிலேயே அதிக பெண் காவலர்களைக் கொண்ட காவல்துறையாக தமிழக காவல்துறை விளங்குகிறது. தமிழகத்தில் மொத்தம்உள்ள 94,583 காவலர்களில் 7,369 பேர் பெண்கள். மொத்த காவலர்கள் எண்ணிக்கையில் இது 7.79 சதவீதம் ஆகும்.
இந்திய அளவில் பெண் காவலர்களின் சராசரி விகிதம் 2.21 சதவீதம் ஆகும். ஆனால் தமிழக பெண் காவலர்களின் எண்ணிக்கை அதைவிட 3 மடங்கு அதிகமாக 7.79 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.