For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஸ்ரீரங்கத்தில் சொர்க்க வாசல் திறப்பு

By Staff
Google Oneindia Tamil News

ஸ்ரீரங்கம்

Renganathar

மோகினி அலங்காரத்தில் ரெங்கநாதர்
பூலோக வைகுண்டம் என்று அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கத்தில் வைகுண்ட ஏகாதசி விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்க வாசல்திறப்பு இன்று அதிகாலை 4 மணியளவில் நடந்தேறியது.

ஸ்ரீரங்கம் ரங்கநாதசுவாமி ஆலயத்தில் வைகுண்ட ஏகாதசி விழா நடந்து வருகிறது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சொர்க்கவாசல்எனப்படும் பரமபத வாசல் திறப்பு இன்று அதிகாலை நடந்தது.

சொர்க்க வாசல் திறப்பையொட்டி நேற்று இரவு முதலே பக்தர்கள் ஸ்ரீரங்கம் கோயிலில் கூடியிருந்தனர். இன்று அதிகாலை 4 மணியளவில்பெருமாள், மூலஸ்தானத்திலிருந்து பரமபத வாசல் வழியாக எழுந்தருளினார். இதையடுத்து கூடியிருந்த பக்தர்கள் கோவிந்தா கோவிந்தாஎன்று கோஷம் எழுப்பியபடி வழிபட்டனர்.

இதேபோல, சென்னை திருவல்லிக்கேணி பார்த்தசாரதி திருக்கோயில், தமிழகத்தில் உள்ள பிற வைணவத் தலங்களிலும் சொர்க்க வாசல்திறப்பு விழா இன்று காலை விமரிசையாக நடந்தேறியது. இரவு 11 மணி வரை பொதுஜன சேவை நடக்கிறது.

சொர்க்கவாசல் திறப்பை முன்னிட்டு ஸ்ரீரங்கத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. ஏராளமான போலீஸார் பாதுகாப்பு பணியில்ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கத்தில் முக்கிய நிகழ்ச்சியான ஸ்ரீரங்கநாதர் குதிரை வாகனத்தில் தோன்றும் வேடுபறி விழா வரும் 29ம் தேதி நடைபெறுகிறது.ஸ்ரீரங்கநாதர் சந்தனு மண்டபத்தில் இருந்து குதிரை வாகனத்தில் புறப்பட்டு இரவு 7 மணிக்கு திருமாமணி மண்டபம் வந்தடைகிறார்.

உபயக்காரர் மரியாதைக்குப் பிறகு இரவு 11.15 மணிக்கு அங்கிருந்து புறப்பட்டு இரவு 12.30க்கு மூலஸ்தானம் வந்தடைகிறார்.அதனையடுத்து 31ம் தேதி தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெறுகிறது. அடுத்த மாதம் முதல் தேதியில் நம்மாழ்வார் மோட்சம், இயற்பாவுடன்வைகுண்ட ஏகாதசி விழா முடிகிறது.

Renganathar

மோகினி அலங்காரத்தில் ரெங்கநாதர்
Mail this to a friend  Post your feedback  Print this page 
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X