For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஏசி மூலம் மயக்க மருந்து.. திருட்டு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னையில் ஒரு வீட்டிற்கு கொள்ளையடிக்க வந்த திருடர்கள், வீட்டின் ஏசி மூலமாக மயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்திஅனைவரையும் மயக்கமடையச் செய்து விட்டு அதன் பின்னர் வீட்டுக்குள் நுழைந்து திருடியுள்ளனர்.

சென்னை புறநகர்ப் பகுதியான கொட்டிவாக்கம் சாமிநாத நகரைச் சேர்ந்தவர் சேஷாத்ரி. இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பொதுமேலாளராக பணியாற்றி வருகிறார்.

இவரது குடும்பத்தினர் நேற்று இரவு தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது அங்கு வந்த திருடர்கள் ஏசி (குளிர்சாதன பெட்டி) வழியாகமயக்க மருந்தை வீட்டுக்குள் செலுத்தியுள்ளனர். இதனால் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தவர்கள் மயக்கமடைந்தனர்.

இதையடுத்து வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த கொள்ளையர்கள் 40 பவுன் நகைகள், ரூ. 20,000 ரொக்கம் ஆகியவற்றைதிருடிக் கொண்டு தப்பினர். நீலாங்கரை போலீஸார் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X