"காணொலி திருடர்கள்!
சென்னை:
திருட்டு விசிடி விற்பனையாளர், தயாரிப்பாளர்களை "காணொலி திருடர்கள்" என்ற பெயரில் அழைக்க வேண்டும்என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
தமிழக அரசுத் துறைகளில் சுத்தத் தமிழைப் பயன்படுத்துவது வழக்கம். அதில் சில பதங்கள்வித்தியாசமானதாகவும், விநோதமாகவும் அமைந்து விடுவதுண்டு. அந்த வகையில் தற்போது திருட்டு விசிடிவிற்பனையாளர்களுக்கு தமிழக அரசுத் துறையினர் வைத்துள்ள பெயர் மிகவும் வித்தியாசமாக உள்ளது.
திருட்டு விசிடி விற்பனையாளர்களை காணொலி திருடர்கள் என்று அரசு அழைக்கிறது. முன்பு காணொலிகொள்ளையர்கள் என்று இவர்களை அரசு அழைத்து வந்தது. ஆனால் கொள்ளையர்கள் என்ற வார்த்தை குறித்துவாதப் பிரதிவாதங்கள் எழுந்தன. இதுகுறித்து தமிழ் ஆட்சி மொழித் துறையிடம் அரசு கருத்து கேட்டது.
அதற்கு தமிழ் ஆட்சி மொழித் துறையினர், ஒருவரின் படைப்புகளைத்தான் திருட்டு விசிடி விற்போர்திருடுகின்றனர். எனவே அவர்களை கொள்ளையர்கள் என்று அழைப்பதற்குப் பதிலாக திருடர்கள் என்றுஅழைக்கலாம் என்று அரசுக்குத் தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடர்ந்து திருட்டு விசிடி விற்பவர்களை காணொலி திருடர்கள் என்ற பெயரில் அழைக்குமாறு மாவட்டஆட்சித் தலைவர்களுக்கு தமிழக அரசின் மது விலக்கு, ஆயத் தீர்வைத் துறை சார்பு செயலாளர் தேவசகாயம்உத்தரவு பிறப்பித்துள்ளார்.
சரி காணொலி என்றால் என்ன? காண் + ஒலி என்பதன் சேர்க்கையே காணொலி ஆகும். ஒலியுடன் கூடிய காட்சி,அதாவது ஒளியும், ஒலியும் சேர்ந்த காட்சிகள் என்பதன் அர்த்தம்தான் காணொலி.