நூற்றுக்கணக்கான லாரிகளில் விரையும் உணவு, மருந்துகள்

Subscribe to Oneindia Tamil

நாகப்பட்டனம்:

Rescue operationகடல் கொந்தளிப்பால் பெரும் பாதிப்புள்ளாகியுள்ள நாகை, கடலூர், கன்னியாகுமரி மாவட்டங்களில் தொற்று நோய் பரவாமல்தடுப்பதற்காக பல்வேறு மாவட்டங்களிருந்தும் நோய் தடுப்பு மருந்துகள் லாரி லாரியாக அனுப்பப்படுகின்றன.

மேலும் உணவுப் பொருட்கள், நிவாரணப் பொருட்களும் லாரிகள் மூலம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன.

பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நூற்றுக்கணக்கான லாரிகளில் இவை விரைகின்றன.

ஜெவுக்கு தலைமை நீதிபதி பாராட்டு:

இதற்கிடையே கன்னியாகுமரியில் விவேகானந்தர் பாறையில் சிக்கிக் கொண்ட உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மாத்தூர் உள்ளிட்ட 500க்கும்மேற்பட்டவர்களை பத்திரமாக மீட்டுக் கரை சேர்த்ததற்காக முதல்வர் ஜெயலலிதாவுக்கு சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதிமார்க்கண்டேய கட்ஜூ பாராட்டு தெரிவித்தார்.

சுனாமி கடல் கொந்தளிப்பின்போது உச்ச நீதிமன்ற நீதிபதி ஜி.பி.மாத்தூரின் குடும்பத்தினரும், நூற்றுக்கணக்கானவர்களுடன் விவேகானந்தர்பாறையில் சிக்கிக் கொண்டனர். கடல் கொந்தளிப்பு காரணமாக படகு சர்வீஸ் ரத்து செய்யப்பட்டால் அவர்களால் கரைக்குத் திரும்பமுடியவில்லை.

Bodies being buried in Velankanni
இதையடுத்து தமிழக அரசு விரைவான நடவடிக்கை மேற்கொண்டு ஹெலிகாப்டர்கள் உதவியுடன் மாத்தூர் உள்ளிட்ட அனைவரையும்அங்கிருந்து பத்திரமாக மீட்டது. இதைத் தொடர்ந்து தலைமை நீதிபதி கட்ஜூ முதல்வர் ஜெயலலிதாவுக்கு தொலைபேசி மூலம் பாராட்டுதெரிவித்தார்.

மேலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தமிழக அரசின் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் சிறப்பாக இருப்பதாகக் கூறிய அவர் தனது பங்களிப்பாகமுதலமைச்சர் நிவாரண நிதிக்கு ரூ. 10,000 வழங்கினார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+