For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

24 மணி நேரத்தில் மீண்டும் சுனாமி தாக்கும் அபாயம்!

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

 bodies being buried togetherஅடுத்த 24 மணி நேரத்திற்குள் மீண்டும் சுனாமி அலைகள் தமிழக கடலோரப் பகுதிகளைத் தாக்கும் அபாயம்உள்ளதாக சென்னை வானிலை ஆராய்ச்சி நிலையத்தின் பூகம்பப் பிரிவு எச்சரித்துள்ளது.

இதுகுறித்து சென்னை நுங்கம்பாக்கம் வானிலை ஆராய்ச்சி நிலையம் வெளியிட்ட அறிக்கையில்,

நேற்று வரை அந்தமான் தீவுப் பகுதியில் 15 முதல் 20 வரை நிலநடுக்கங்கள் ஏற்பட்டுள்ளன.

இதே போல இந்தேனேசிய நாட்டின் சுமத்ரா தீவுப் பகுதியில் மீண்டும் பூகம்பம் ஏற்பட்டு வருகிறது. 65 முறைக்குமேல் சுமாரான நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது.

இதனால் மீண்டும் சுமானி அலைகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. 30 அடி உயரம் கூட இந்த அலைகள் எழலாம்.

எனவே அடுத்த 24 மணி நேரத்திற்குள் தமிழக கடலோரப் பகுதிகளை மீண்டும் சுனாமி அலைகள் தாக்கக் கூடும்.

எனவே கடலோரப் பகுதி மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். அவர்கள் மேடான பகுதிகளுக்குப்போய்விடுவது நல்லது.

மீனவர்கள் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X