For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

3 இலங்கை அகதிகள் கைது

By Staff
Google Oneindia Tamil News

ராமேஸ்வரம்:

இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற 3 தமிழ் அகதிகளை ராமேஸ்வரம் போலீஸார் கைது செய்தனர்.

ராமேஸ்வரம் போலீஸார் தனுஷ்கோடி அருகே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படகு ஒன்றில் 3 பேர் ஏறமுயற்சித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.

விசாரணையில், பவானி சாகர் முகாமைச் சேர்ந்த சிவக்குமார், வத்தலகுண்டு முகாமைச் சேர்ந்த ரவி, வேலூர் முகாமைச் சேர்ந்த செல்விஆகிய 3 பேரும் ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்து படகு மூலம் இலங்கைக்குத் திரும்ப எத்தனித்தது தெரிய வந்தது.

3 பேரையும் போலீஸார் கைது செய்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X