For Daily Alerts
Just In
3 இலங்கை அகதிகள் கைது
ராமேஸ்வரம்:
இலங்கைக்கு படகு மூலம் செல்ல முயன்ற 3 தமிழ் அகதிகளை ராமேஸ்வரம் போலீஸார் கைது செய்தனர்.
ராமேஸ்வரம் போலீஸார் தனுஷ்கோடி அருகே வழக்கமான ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது படகு ஒன்றில் 3 பேர் ஏறமுயற்சித்துக் கொண்டிருந்ததைப் பார்த்து அவர்களைத் தடுத்து நிறுத்தினர்.
விசாரணையில், பவானி சாகர் முகாமைச் சேர்ந்த சிவக்குமார், வத்தலகுண்டு முகாமைச் சேர்ந்த ரவி, வேலூர் முகாமைச் சேர்ந்த செல்விஆகிய 3 பேரும் ஒரு ஏஜென்ட்டிடம் பணம் கொடுத்து படகு மூலம் இலங்கைக்குத் திரும்ப எத்தனித்தது தெரிய வந்தது.
3 பேரையும் போலீஸார் கைது செய்து மண்டபம் அகதிகள் முகாமுக்கு அனுப்பி வைத்தனர்.
Story first published: Wednesday, January 12, 2005, 5:30 [IST]