போகி: டயர்கள் எரிக்க தடை
சென்னை:
போகி பண்டிகையையொட்டி டயர்கள், பிளாஸ்டிக் போன்ற பொருட்களை எரிக்கக் கூடாது என்று காவல்துறை மற்றும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் ஆகியவை தடை விதித்துள்ளன.
வருகிற 14ம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. அதற்கு முந்தைய நாள் போகிப் பண்டிகை கொண்டாடப்படும்.சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத வகையில் போகிப் பண்டிகை கொண்டாட்டங்கள் அமைய வேண்டும் என்று தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டுவாரியம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதை வலியுறுத்தி மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் விழிப்புணர்வுப் பிரசாரம் மேற்கொள்ளப்படவுள்ளது. இந்தப் பிரசாரத்தைதமிழ்நாாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கிரிஜா வைத்தியநாதன், உள்துறைச் செயலாளர் ஷீலா ராணி சுங்கத் ஆகியோர்தொடங்கி வைத்தனர். அப்போது மாசுக் கட்டுப்பாட்டு உறுதிமொழியும் எடுத்துக் கொள்ளப்பட்டது.
பின்னர் கிரிஜா வைத்தியநாதன் செய்தியாளர்களிடம் பேசுகையில், போகியின்போது டயர்கள், பிளாஸ்டிக் பொருட்கள் போன்றவற்றைஎரிக்கக் கூடாது. அப்படி எரிப்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிக்கும்போது நச்சுவாயுக்கள் வெளியேறி, ஆஸ்த்மா, மூச்சுத் திணறல் ஆகியவற்றிற்கு வழி வகுக்கும்.
டயர், பிளாஸ்டிக் போன்றவற்றை எரிப்பதற்குப் பதிலாக சுனாமியால் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், மெழுகுவர்த்திஏற்றி வைக்க மக்கள் முன்வர வேண்டும் என்றார் அவர்.












Click it and Unblock the Notifications