கும்பளே, டாக்டர் பக்தவச்சலத்துக்கு பத்மஸ்ரீ விருது
டெல்லி:
இந்த ஆண்டுக்கான பத்ம பூஷன் விருது விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜிக்கும், பத்மஸ்ரீ விருது கிரிக்கெட் வீரர் அனில்கும்ப்ளேவுக்கும் வழங்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக உயரிய விருதான பத்ம விபூஷன் விருது பெற கார்ட்டூனிஸ்ட் ஆர்.கே.லட்சுமண், மறைந்த பாதுதாப்புத்துறை ஆலோசகர்ஜே.என்.தீட்சித் உள்ளிட்ட 9 பேர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த விருதுகள் பெறுவோரின் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.
பத்மபூஷன் விருது பெறுவோர்:
பின்னணிப் பாடகர் மண்ணா டே
விப்ரோ நிறுவன அதிபர் ஆஸிம் பிரேம்ஜி
முன்னாள் பிபிசி செய்தியாளர் மார்க் டுலி
படத் தயாரிப்பாளர் யாஷ் சோப்ரா
வரலாற்று அறிஞர்களான இர்பான் ஹபீப், ரோமிலா தாபர்
பொருளாதார வல்லுனர் மிர்னால் தத்தா செளத்ரி
சமூகவியல் வல்லுனர் ஆன்ட்ரே பெட்டிலி
கல்வியாளர் பல்ராஜ் பூரி உள்ளிட்ட 30 பேருக்கு பத்ம பூஷன் விருது வழங்கப்படுகிறது.
பத்மஸ்ரீ விருது பெறுவோர்:
தமிழகத்தைச் சேர்ந்த டாக்டர் ஜி.பக்தவச்சலம், ஒரிஸ்ஸாவில் எரித்துக் கொல்லப்பட்ட பாதிரியார் கிரஹாம் ஸ்டெயின்சின் மனைவிகிளாடிஸ், நடிகர் ஷாருக் கான், இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிக்கை துணைத் தலைவர் ஷோபனா பார்த்தியா, கிரிக்கெட் வீரர் கும்பளே,
ஒலிம்பிக்சில் துப்பாக்கி சுடுவதில் வெள்ளிப் பதக்கம் வென்ற ரத்தோர், முன்னாள் தடகள வீரர் குருபஜன் சிங், பாட்மிட்டன் சாம்பியன்புலேலா கோபிசந்த், ஸ்கை டைவர் ரேச்சல் தாமஸ்,
காஷ்மீர் பாடகர் ஷமீம் தேவ், பெப்சி-கோக் ஆகியவற்றில் பூச்சி மருந்து கலந்திருப்பதை வெளிப்படுத்திய சுனிதா நாராயண் ஆகியோர்உள்பட 57 பேருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications