பிளஸ் டூ தேர்வுகள் தொடக்கம்
சென்னை:
தமிழ்நாட்டில் பிளஸ் டூ தேர்வுகள் இன்று காலை தொடங்கின. 5.7 லட்சம் மாணவ-மாணவிகள் இந்த தேர்வுஎழுதுகின்றனர்.
இன்று தமிழ் முதல் தாள் தேர்வு நடக்கிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 1,511 தேர்வு மையங்களில்5,71,229 பேர் தேர்வு எழுதுகின்றனர். 2,61,456 பேர் மாணவிகள். இதில் 2,55,596 பேர் மாணவர்கள்.
இவர்களைத் தவிர 54,177 பேர் பள்ளிகள் மூலமின்றி தனியாக தேர்வு எழுதுகின்றனர்.
வரும் 23ம் தேதி வரை இத் தேர்வுகள் நடக்கும். தேர்வு மையங்களில் முறைகேடுகளைத் தவிர்க்க 65 கல்விமாவட்டங்களிலும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
சுனாமியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தேர்வு தொடங்குவது தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இப் பகுதிகளைச் சேர்ந்த10,181 மாணவ, மாணவிகளுக்கு ஏப்ரல் 4ம் தேதி தொடங்கி 26-ந்தேதி வரை தேர்வுகள் தனியாகநடத்தப்படுகின்றன.
சென்னையில் சுனாமி பாதித்த பகுதிகளைச் சேர்ந்த 8 பள்ளிகளின் மாணவ மாணவிகள் இன்றே தேர்வெழுதவிருப்பம் தெரிவித்துவிட்டனர்.
விடைத்தாள்கள் திருத்தும் பணி 36 மையங்களில் வரும் 18ம் தேதி தொடங்கும்.
தேர்வு முடிவுகள் மே மாத கடைசியில் வெளியாகும்.