கருணாநிதி-வாசன் சந்திப்பு: கூட்டணி தொடரும் என அறிவிப்பு
சென்னை:
திமுக தலைவர் கருணாநிதியை, காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் இன்று நேரில் சந்தித்துப் பேசினார்.
மத்திய அமைச்சர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்பான பிரச்சினையால் தமிழக காங்கிரஸ் கட்சிக்கும், திமுகவுக்கும்இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தையடுத்து சமீபத்தில் ஸ்டாலினைத் தொலைபேசியில் தொடர்பு கொண்ட வாசன், அப்பாகிட்ட எப்படிபேசுறதுன்னே தெரியல. அவரை பார்க்கவே பயம்மா இருக்கு என்றாராம்.
இந் நிலையில் வாசன் இன்று கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதியின் வீட்டிற்குச் சென்று அவரைச் சந்தித்தார். இச் சந்திப்பு சுமார்ஒன்றரை மணி நேரம் நீடித்தது.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வாசன், இது மரியாதை நிமித்தமான சந்திப்பு தான். தமிழக காங்கிரஸ் கட்சியைப்பொருத்தவரை கட்சி மேலிடத்திற்கு கட்டுப்பட்டவர்கள். கட்சி மேலிடம் என்ன முடிவு எடுக்கிறதோ அதை ஏற்றுசெயல்படுத்துவோம்.
இதை கட்சியின் பொதுச் செயலாளர் அம்பிகா சோனியும் தெளிவாகக் கூறியுள்ளார். திமுகவுக்கும், காங்கிரஸ் கட்சிக்கும்இடையிலான கூட்டணி தொடரும். வரும் சட்டசபைத் தேர்தலிலும் அது தொடரும்.
கூட்டணி, இடங்கள் பகிர்வு குறித்து கருணாநிதியும் சோனியா காந்தியும் பேசி முடிவு செய்வார்கள். இந்தக் கூட்டணி ஒரு வெற்றிக்கூட்டணி என்றார் வாசன்.












Click it and Unblock the Notifications