சென்னை: நகைக்கடையில் 300 பவுன் நகை கொள்ளை

Subscribe to Oneindia Tamil

சென்னை:

சென்னை தி.நகரில் உள்ள பிரபல நகைக் கடையில் 300 பவுன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டுள்ளன.

சென்னை தி.நகர் பிரகாசம் சாலையில் அபிராமி ஜூவல்லர்ஸ் என்ற பிரபலமான நகைக் கடை உள்ளது. இந்த நகைக் கடையில்நேற்று அதிகாலை 4 மணியளவில் அடையாளம் தெரியாத சிலர், கடையின் பின்பக்க சுவரில் துளையிட்டுள்ளனர்.

அதன் பின்னர் கடைக்குள் நுழைந்து 300 பவுன் நகைகளை கொள்ளையடித்துக் கொண்டு தப்பியுள்ளனர்.

கொள்ளையர்கள் நகைகளை மூட்டையாகக் கட்டிக் கொண்டிருந்தபோது, கடையில் இருந்த எச்சரிக்கை அலாரம், அதைப்பொருத்திய தனியார் பாதுகாப்பு நிறுவனத்தில் ஒலித்துள்ளது. இதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தினர், நகைக் கடை உமையாளர்சேஷ மகாதேவனுக்குப் போன் செய்து தெரிவித்துள்ளனர்.

அதே தெருவில்தான் சேஷ மகாதேவனின் வீடும் உள்ளதால் உடனடியாக அவர் விரைந்து வந்து கடையின் முன் பகுதியைப்பார்த்துள்ளார். கடை பூட்டு சரியாக இருப்பதைப் பார்த்த அவர் திரும்பிச் சென்று விட்டார். பின்பக்கம் சென்று அவர்பார்த்திருந்தால் கொள்ளையர்களை கையும் களவுமாக பிடித்திருக்கலாம்.

இந்தசம்பவம் குறித்து பாண்டி பஜார் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+