இந்தியன் ஏர்லைன்ஸ் விமான கட்டணம் கிடுகிடு உயர்வு
சென்னை:
இந்தியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமான கட்டணங்கள் கடுமையாக உயர்த்தப்பட்டுள்ளன. இதே போல ஜெட் ஏர்வேஸ் உள்ளிட்டதனியார் நிறுவனங்களும் கட்டணத்தை உயர்த்த திட்டமிட்டுள்ளன.
ஏப்ரல் 15ம் தேதி முதல் இந்த கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது.
இருப்பினும் விடுமுறைக் கால திட்டம், சூப்பர் பம்பர் சிறப்பு சேமிப்புத் திட்டம், பாயின்ட் டூ பாயின்ட் பயணத்திற்கான கட்டணம் உள்ளிட்டசிறப்பு கட்டண விகிதத்தில் இயக்கப்பட்டு வரும் விமானங்களுக்கான பயணக் கட்டணத்தில் எந்த மாற்றமும் தற்போதைக்கு இருக்காது எனஇந்தியன் ஏர்லைன்ஸ் அறிவித்துள்ளது.
இக் கட்டணங்களும் விரைவில் மறு பரிசீலனை செய்யப்பட்டு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்று தெரிகிறது. புதிய விகிதப்படி,சென்னையிலிருந்து பிற ஊர்களுக்கான விமானக் கட்டண விகிதம்:
டெல்லி: ரூ. 13,210
மதுரை: ரூ. 4,485
திருச்சி: ரூ. 3,830
கோவை: ரூ. 4,670
பெங்களூர்: ரூ. 3,560
ஹைதராபாத்: ரூ. 5,690
கொல்கத்தா: ரூ. 11,405
மும்பை: ரூ. 7,160
இந்தியன் ஏர்லைன்ஸைத் தொடர்ந்து ஜெட் ஏர்வேஸ், சஹாரா நிறுவனங்களும் ஓரிரு தினங்களில் விமானக் கட்டணத்தை உயர்த்தும் என்றுஎதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications