செளதி: இந்தியருக்கு மன்னிப்பு வழங்க கோரிக்கை
துபாய்:
கார் விபத்தில் 7 பேர் பலியான சம்பவம் தொடர்பாக செளதி அரேபிய சிறையில் அடைக்கப்பட்டுள்ள இந்திய டிரைவருக்குமன்னிப்பு வழங்குமாறு அந் நாட்டு அரசிடம் இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது.
கேரள மாநிலம் கோழிக்கோட்டை சேர்ந்தவர் குமார். செளதி அரேபியாவில் கார் டிரைவராக பணிபுரிந்து வந்தார். 3வருடங்களுக்கு முன் ஜெட்டா- ரியாத் நெடுஞ்சாலையில் இவரது கார் விபத்தில் சிக்கியது. இதில் இவரது காரில் இருந்த செளதிஅரேபியாவைச் சேர்ந்த 7 பேர் பலியானார்கள்.
ஆனால், அவ்வளவு தொகையை குமாரால் தர முடியாததால் கடந்த 3 வருடங்களாக அவர் சிறையிலேயே உள்ளார்.
இது தொடர்பாக கோழிக்கோடு மாவட்ட கலெக்டர், துபாயிலுள்ள இந்திய தூதரகத்தின் தொழிலாளர் நலத்துறை அதிகாரிநாராயணனுக்கு கடிதம் எழுதினார்.
இதையடுத்து குமாருக்கு மன்னிப்பு வழங்குமாறு செளதி அரசிடம், இந்தியா கோரிக்கை விடுத்துள்ளது. நாராயணன் மூலம் செளதிஅரசிடம் தரப்பட்டுள்ள அந்த மனுவில், குமார் ஓட்டிச் சென்ற காரின் மீது பின்னால் வேகமாக வந்த ஒரு டிரக் மோதியது. இதனால்தான் குமாரின் கார் விபத்தில் சிக்கியது.
எனவே குமாரின் மீது எந்தத் தவறும் இல்லை. மேலும் குமார் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர். அவரால் அவ்வளவுபெரிய தொகையை கட்ட முடியாது. எனவே குமாருக்கு பாவ மன்னிப்பு வழங்கி விடுவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications