For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

இந்தியாவில் 2,000 கோடி முதலீடு: ஜப்பான்

By Staff
Google Oneindia Tamil News

டெல்லி:

வியட்நாம் செல்லும் வழியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஹர்கிஷன் சிங் சுர்ஜித்துக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் அவர் பாங்காக்கிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அமெரிக்காவை வியட்நாம் தோற்கடித்த போர் முடிந்த 30ம் ஆண்டு விழாவில் கலந்து கொள்வதற்காக ஹர்கிஷன் சிங் சுர்ஜித்வியட்நாம் புறப்பட்டு சென்றார்.

வழியில் அவருக்கு திடீரென வயிற்றுப் போக்கு ஏற்பட்டதால் உடனடியாக அவர் பாங்காக்கிலுள்ள ஒரு மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சுர்ஜித்தின் உடல்நிலை தற்போது நல்ல நிலையில் இருப்பதாகவும், ஆனாலும் டாக்டர்கள் அவரை தீவிரமாக கண்காணித்துவருவதாகவும் பாங்காக்கிலுள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

சுர்ஜித்தின் உடல்நிலை குறித்து அறிந்து கொள்வதற்காக நிலோத் பால் எம்.பியை பாங்காக் அனுப்ப மார்க்சிஸ்ட் கட்சியின்பொலிட் பீரோ முடிவு செய்துள்ளது.

இதற்கிடையே வெளியுறவுத் துறை அமைச்சர் நட்வர் சிங் தொலைபேசி மூலம் சுர்ஜித்தை தொடர்பு கொண்டு பேசி உடல் நலம்குறித்து விவரங்களை கேட்டறிந்தார். மேலும் நட்வர்சிங், தாய்லாந்து நாட்டின் துணை பிரதமர் சதிரத்தாயுடன் தொடர்பு கொண்டுபேசினார்.

அவர், சுர்ஜித்துக்கு சிறப்பு சிகிச்சை அளிக்கப்படும் என்று நட்வர்சிங்கிடம் உறுதியளித்தார்.

மத்தியில் காங்கிரஸ் கூட்டணி அரசு பதவிக்கு வர முக்கியக் காரணமாக விளங்கியவர் சுர்ஜித் என்பது குறிப்பிடத்தக்கது.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X