For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சென்னையில் பலத்த சூறாவளி காற்றுடன் மழை

By Staff
Google Oneindia Tamil News

சென்னை:

சென்னை அருகே இன்று காலை பலத்த சூறாவளிக்காற்றுடன் மழை பெய்தது. இதில் பல குடிசைகள் பறந்தன. ஏராளமானபடகுகளும் சேதமடைந்தன.

சென்னை அருகே உள்ள உத்தண்டி மற்றும் துறைமுகம் பகுதியில் இன்று காலை 6.30 மணியளவில் திடீரென பலத்த சூறாவளிக்காற்று வீசியது. அதைத் தொடர்ந்து சிறிது நேரத்தில் கனமழையும் பெய்தது.

இந்த திடீர் சூறாவளிக்காற்றுடன் அடித்த மழையால் ஏராளமான மரங்கள் மற்றும் மின்கம்பங்கள் அடியோடு சாய்ந்தன. இதனால்பல பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.

மேலும் இந்த சூறாவளிக்காற்றால் கடற்கரையில் நிறுத்தப்பட்டிருந்த பல படகுகள் நீண்ட தூரத்திற்கு தூக்கி வீசப்பட்டன. இதில்ரூ.8 லட்சம் மதிப்புள்ள படகுகள் சேதமடைந்ததாக கூறப்படுகிறது. 20க்கும் மேற்பட்ட குடிசைகளும் காற்றில் தூக்கி வீசப்பட்டன.

ஏற்கனவே சுனாமி அச்சத்தில் இருக்கும் இப்பகுதி மக்கள் இந்த திடீர் சூறாவளிக்காற்றால் மேலும் பீதியடைந்துள்ளனர்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X