பாப்பாபட்டி: தேர்தலை நடத்த வீரமணி கோரிக்கை
சென்னை:
பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம், கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துகளில் தேர்தலை நடத்தி மக்கள் பிரதிநிதிகள்பணியாற்ற தமிழக அரசு முழு முயற்சி எடுக்க வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
அவர் விடுத்துள்ள அறிக்கையில், மதுரை மாவட்டம் பாப்பாபட்டி, கீரிப்பட்டி, நாட்டார்மங்கலம் மற்றும் விருதுநகர் மாவட்டம்கொட்டக்காச்சியேந்தல் ஆகிய தலித் பஞ்சாயத்துக்களுக்கு முறையாக தேர்தல் நடைபெறாமல் உள்ளது.
இதேபோல, அரசு உயர் பதவிகளில் ஆதி திராவிடர்களுக்குரிய இடங்கள் நிரப்பப்படாமல் காலியாகவே வைக்கப்பட்டுள்ளன.அவற்றையும் உடனடியாக நிரப்ப அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியுள்ளார் வீரமணி.
இந்த 4 பஞ்சாயத்துகளிலும் தலித்தை தலைவராக ஏற்க மறுக்கும் முக்குலத்தோர் சமுதாயத்தினர், முறையாகத் தேர்தல் நடத்த விடாமல்தடுத்து வருவது குறிப்பிடத்தக்கது.