குழந்தைக்கு பெயர், வாக்காளர்களுக்கு பணம்: ஜெ மீது திமுக புகார்
Subscribe to Oneindia Tamil
கும்மிடிப்பூண்டி:
![]() |
ஜெயலலிதாவின் கையில் நூறு ரூபாய் நோட்டுக்கள்
தேர்தல் பிரசாரத்தின்போது வாக்காளர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா பணம் கொடுத்ததாக திமுக புகார் கூறியுள்ளது.
இதுதொடர்பாக திமுக தேர்தல் ஒருங்கிணைப்புச் செயலாளர் டி.கே.எஸ். இளங்கோவன் தலைமைத் தேர்தல் ஆணையருக்குஅனுப்பியுள்ள கடிதத்தில்,
காஞ்சிபுரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தின்போது ஒரு குழந்தைக்கு ஜெயலலிதா ரூ. 100 கொடுப்பது போல படங்கள்வெளியாகியுள்ளன.
![]() |
சசி சகிதமாக பிரச்சாரத்தில் ஜெயலலிதா
குழந்தைகளுக்கு பெயர் சூட்டுவது என்ற பெயரில், பணம் தருகிறார். இதன் மூலம் வாக்காளர்களுக்கு அவர் லஞ்சம் கொடுத்துவருகிறார். இது தேர்தல் விதியை மீறும் செயலாகும்.
எனவே இதுகுறித்து தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியுள்ளார் இளங்கோவன்.
ஜெயலலிதாவிடம் பெயர் சூட்டுவதாகக் கூறி நீட்டப்படும் குழந்தைகளுக்கு (இதில் பல குழந்தைகள் ஏற்கனவே பெயர்சூட்டப்பட்டவை என்றும் சொல்கிறார்கள்) ஒரு முத்தம், பிளஸ் பெயர் சூட்டும் முதல்வர் ஜெயலலிதா, அப்படியே அதன் தாயார்அல்லது தந்தையிடம் சில நூறு ரூபாய்களையும் கையில் திணித்து வருகிறார்.














Click it and Unblock the Notifications