சுயமரியாதை திருமணம்: அதிமுகவுக்கு வீரமணி கோரிக்கை
சென்னை:
சுயமரியாதைத் திருமணங்களை சட்டப்பூர்வமாக அங்கீகரிக்க வேண்டும் என்ற திமுகவின் கோரிக்கைக்கு அதிமுகவும் ஆதரவுதர வேண்டும் என்று திராவிடர் கழக பொதுச் செயலாளர் கி.வீரமணி கோரிக்கை விடுத்துள்ளார்.
இதுதொடர்பாக வீரமணி வெளியிட்டுள்ள அறிக்கையில், கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாக தந்தை பெரியார் சுயமரியாதைத்திருமண முறையைப் பிரசாரம் செய்ததோடு, அதனை நடைமுறைப்படுத்தி, இன்று தமிழ்நாட்டில் மூன்று தலைமுறைகளுக்கும்மேலாக அது கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது.
எப்படி இந்தித் திணிப்பில் திமுகவுடன் இணைந்து அதிமுக குரல் கொடுக்குமோ, அப்படித் தான் இதிலும் இணைந்து குரல்கொடுக்க வேண்டும். காரணம் அண்ணா தான் சுய மரியாதைத் திருமண சட்டத்தை நிறைவேற்றி சரித்திர சாதனை செய்தவர்என்பதால் அவரது பெயரில் உள்ள அண்ணா திமுகவும் இதனை ஏற்க வேண்டும் என்பது நியாயமான கோரிக்கை தானே என்றுகூறியுள்ளார் வீரமணி.