எலும்பு முறிவு: ஆர். வெங்கட்ராமன் மருத்துவமனையில் அனுமதி
கோவை:
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன், குளியலறையில் வழுக்கி விழுந்ததில் தோள் பட்டை எலும்பு விலகிவிட்டது.இதையடுத்து அவர் கோவையில் தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
94 வயதான வெங்கட்ராமன் கோவை அருகே 25 கி.மீ. தொலைவில் ஆனைக்கட்டியிலுள்ள ஆரிய வைத்யா குருகுலம் என்றஆசிரமத்தில் தங்கியிருந்தார். இன்று காலை குளியலறைக்கு சென்ற அவர் வழுக்கி விழுந்தார்.
வழுக்கி விழுந்ததில் அவரது, இடது தோள் பகுதி எலும்பு விலகி விட்டதால், அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இது குறித்து மருத்துவமனையின் தலைமை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் ராஜசேகர் கூறுகையில், குளியலறையில் தவறிவிழுந்ததில் வெங்கட்ராமனின் இடது தோள் பகுதியில் காயம் ஏற்பட்டுள்ளது. மேலும் எலும்பும் சிறிது விலகி விட்டது.
இதை சரி செய்ய அவருக்கு உடனடியாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. சுமார் 30 நிமிடங்கள் இந்த அறுவை சிகிச்சைநடந்தது. தற்போது அவர் நலமாக உள்ளார் என்றார்.
இந்தச் சம்பவம் காரணமாக இன்று வெங்கட்ராமன் ஈரோடு செல்ல இருந்த பயணம் ஒத்தி வைக்கப்பட்டது.
இந்த ஆனைக்கட்டி ஆஸ்ரமத்தில் ரஜினி உள்ளிட்ட பல பிரபலங்கள் தங்குவதுண்டு.












Click it and Unblock the Notifications